சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்க சென்றதாக வெளியான தகவல் தவறானது என்று வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார். பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வையே ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது செல்லாது எனவும் கூறினார்.