சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, அவைத் தலைவர் நியமன தீர்மானத்தை எப்படி கொண்டு வந்தார்கள்? என சி.வி.சண்முகத்துக்கு வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். அனைத்து பதவிகளும் ரத்து என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதாக கூறிய நிலையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.