×

அசாம் வெள்ளம் 54 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் பெய்த தொடர் கனமழையால், பெரும்பாலான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தினால் இதுவரை 32 மாவட்டங்களில் சுமார் 54.5 லட்சம் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 276 படகுகளின் உதவியுடன் 3,658 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 12 மாவட்டங்களில் 14,500 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்டுள்ளனர். மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.



Tags : Assam , Assam floods 54 lakh people affected
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...