×

வளர்க்க மனமில்லாமல் 6 மாத பெண் குழந்தையை அனாதை என ஜி.ஹெச்சில் ஒப்படைப்பு: நாடகமாடிய தந்தை உள்பட 2 பேர் கைது

சிவகங்கை: தனது 6 மாத குழந்தையை அனாதை எனக்கூறி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து நாடகமாடிய தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூருக்கு காரில் செல்லும்போது வழியில் திருப்பாச்சேத்தியில் சாலையோரத்தில் 6 மாத பெண் குழந்தை கிடந்தது எனக்கூறி, 2 இளைஞர்கள் கடந்த 11ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தங்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், திருமங்கலம் என தெரிவித்தனர். இந்த குழந்தை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் சைமன்ஜார்ஜ், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத்தலைவர் சரளா மற்றும் உறுப்பினர்கள் விசாரணை செய்தனர்.இதில்,  குழந்தையின் தந்தை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எருமாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (எ) ஆனந்தகுமார் என்பதும், குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல், சாலையில் அனாதையாக கிடந்தது எனக் கூறி நாடகமாடி மருத்துவமனையில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புகாரின்படி ஆனந்தகுமார், உறவினர் தர்மபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குழந்தை பராமரிப்பிற்காக மதுரையிலுள்ள தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டது….

The post வளர்க்க மனமில்லாமல் 6 மாத பெண் குழந்தையை அனாதை என ஜி.ஹெச்சில் ஒப்படைப்பு: நாடகமாடிய தந்தை உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : G. ,Hechil ,Dramatiya ,Sivagangai ,
× RELATED பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து...