×

கோயில் நுழைவு வாயிலில் பிடிபட்ட 8 அடி நீள பாம்பு: திருவில்லிபுத்தூரில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் நுழைவுவாயில் அருகே பிடிபட்ட பாம்பு, அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்தில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் நுழைவாயில் அருகே நேற்று சுமார் 8 அடி நீள நல்ல பாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்புத் துறை அலுவலர் குருசாமி, அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கோயில் நுழைவாயில் அருகே பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் பாம்பை பத்திரமாக விடுவித்தனர். இந்த சம்பவத்தால் கோயில் நுழைவாயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Tags : Srivilliputhur , 8-foot-long snake caught at temple entrance: Trouble in Srivilliputhur
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...