×

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: கொடும்பாளூர் சத்திரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நேற்றிரவு மாதிரிப்பட்டியைச் சேர்ந்த கௌதம், பிரவீன், சூரியபிரகாஷ் ஆகிய மூன்று இளைஞர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் கொடும்பாளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அதேபோல் விராலிமலை அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சவுக்குக்காடு கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் வடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கொடும்பாளூரில் இருந்து புதுக்கோட்டை சாலையில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சத்திரம் என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த கௌதம் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.படுகாயம் அடைந்த பிரவீன் குமார் மற்றும் சூரிய பிரகாஷ் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மூவரின் சடலமும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Two-wheeler collided head-on: 3 killed
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...