×

டெல்லி, பஞ்சாப், உ.பி. உள்பட 6 மாநில இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

புதுடெல்லி: 6 மாநிலங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 3 மக்களவை மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலம் அசம்கர், ராம்பூர் மற்றும் பஞ்சாபில் உள்ள சங்ரூர் ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதேபோல, டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர், ஜார்கண்டில் உள்ள மந்தர், ஆந்திராவின் ஆத்மகூர் மற்றும் அகர்தலாவில் உள்ள டவுன் போர்டோவாலி, திரிபுராவில் உள்ள சுர்மா மற்றும் ஜபராஜ்நகர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் காலியாக உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும். தேர்தல் முடிவுகள் வரும் 26ம் தேதி வெளியிடப்படும். ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, காலியான டெல்லி ராஜிந்தர் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், பாஜ முன்னாள் கவுன்சிலர் ராஜேஷ் பாட்டியா மற்றும் காங்கிரசின் பிரேம் லதா ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் துர்கேஷ் பதக் போட்டியிடுகிறார். முன்னதாக, ராஜீந்தர் நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. 1 லட்சத்து 64 ஆயிரம் தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Delhi, ,Punjab ,U.P. , Delhi, Punjab, U.P. Voting began in 6 state by-elections, including
× RELATED டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்