மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், தேர்வில் தோல்வி அடைந்தாலும் மதிப்பெண் குறைந்தாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு லட்சுமி போல் நிமிர்ந்து நிற்க வேண்டும். எந்த நிதிச்சுமை இருந்தாலும் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். இதற்காக சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் துவங்கும் என்றார்.