குத்தாலம் : குத்தாலம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறையினர் புதிய சாலையை அமைத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஒன்றியம் சேத்திரபாலபுரம்ஊராட்சி தொழுதாலங்குடி ஊராட்சி இடையேயான சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலையானது ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக ஏற்ற இறக்கமான சாலையாக காட்சியளித்தது.
இந்த சாலை பிரதான சாலை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தினகரன் நாளிதழில் இந்தச் செய்தி படத்துடன் வெளியானது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்து 1 கிலோமீட்டர் தூரத்திற்கு முழுவதுமாக புதிய தார் சாாலை போடப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.