சென்னை: பொதுக்குழு நடைபெறும் வானகரம் மண்டபத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்தடைந்தார். ஓபிஎஸ் முதலில் வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலால் சுமார் ஒரு மணி நேரம் எடப்பாடி பழனிசாமி தாமதமாக வந்தார். பொதுக்குழு மேடைக்கு வந்த ஈபிஎஸ்க்கு தொண்டர்கள் கரவொலி எழுப்பி, விசில் அடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.