சென்னை: அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்துள்ளதால் விவாதிக்க மட்டும் திட்டமிட்டுள்ளனர். ஒற்றைத் தலைமையாக ஈபிஎஸ் தேர்வாகும் வரை பிற தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.