சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு மண்டபத்துக்கு முதலில் வந்தடைந்தார். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்த பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.