×

தர்மம் வென்றிருக்கிறது செங்கோட்டையன் பேட்டி

சென்னை: பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். தர்மம் வென்றிருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்று குறிப்பிட்டார்கள், இப்போது தர்மம் வென்றுள்ளது. ஆacகவே தர்மம் என்றைக்கும் நிலைத்திருக்கும். என்றைக்குமே பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் இருக்கிறது. ஆகவே பொதுக்குழுவில் அனைத்து முடிவுகளும் சிறப்பான முறையில் நிறைவேற்றப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மீண்டும் அதிமுக எதிர்காலத்தில் வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெறும் என்பதே தீர்ப்பு. தற்போது தர்மம் வென்றியிருக்கிறது.

இதை தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. மேலும் இன்று பிற்பகல் 1 மணியளவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இது தொடர்பான அனைத்து தடைகளும் நீங்கியுள்ளது என்றனர்.

Tags : Dharma ,Red , Dharma has won the Red Fort interview
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...