×

சம்பளம் வாங்காமல் நடித்த ஷாருக்கான், சூர்யா: மாதவன் நெகிழ்ச்சி

சென்னை: ராக்கெட்ரி படத்துக்கு ஷாருக்கான், சூர்யா சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்தனர் என்றார் மாதவன்.நடிகர் மாதவன், நடித்து இயக்கியுள்ள படம் ராக்கெட்ரி - எ நம்பி எஃபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படம். இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்திருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இந்தி பதிப்பில் ஷாருக்கானும் தமிழ் பதிப்பில் சூர்யாவும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள். இது குறித்து மாதவன் கூறியது:இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஷாருக்கானையும் சூர்யாவையும் கேட்டபோது, உடனே சம்மதித்தார்கள். அதற்கு எங்களுக்கு இடையிலான நட்புதான் காரணம். ஷாருக்கானின் மேனேஜரிடம் பேசியபோது, என்றைக்கு படப்பிடிப்பு என கான் சாப் கேட்கிறார் என்றுதான் சொன்னார்.

சொன்ன நாளில் சரியாக வந்து சேர்ந்தார். ஷாருக்கானும் சரி, சூர்யாவும் சரி, இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளமே வாங்கவில்லை. மும்பையில் படப்பிடிப்பு நடந்தபோது, சூர்யா சென்னையிலிருந்து விமானத்தில் வந்தார். விமான டிக்கெட் முதல் உதவியாளர்களுக்கான சம்பளம் வரையும் அவர் எதுவுமே கேட்கவில்லை. அத்தனையும் அவரது சொந்த செலவில் பார்த்துக்கொண்டார். ஷாருக்கானும் கேரவன் கூட பயன்படுத்தவில்லை. இருவருக்கும் நான் மனதிலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்துக்காக இன்னொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர், அமிதாப் பச்சன். இந்தி பதிப்புக்கு அவரது பின்னணி குரல் தேவைப்பட்டது. அதை அவர் கொடுத்திருக்கிறார்.




Tags : Shah Rukh Khan ,Surya , Played without pay Shah Rukh Khan, Surya: Madhavan Flexibility
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...