செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பாமக சார்பில், ஒருங்கிணைந்த மறைமலைநகர் நகர பாமக புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மறைமலைநகர் தனியார் மண்டபத்தில் நடந்தது. நகர செயலாளர்கள் ம.தணிகாசலம், ஜெ.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, மாநில வன்னியர் சங்க தலைவர் திருக்கச்சூர் ஆறுமுகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர், நகர பாமக புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, நகர தலைவர்கள் தெய்வசிகாமணி, சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் சசிகலா ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.