சென்னை: மந்தைவெளி பணிமனையில் சிசிடிவி கேமரா திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மந்தைவெளி மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு மற்றும் பேருந்துகள் எந்த நேரத்தில் பணிமனையில் இருந்து வெளியே செல்கிறது என்பது குறித்து கண்காணிக்க பணிமனையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
இந்த சிசிடிவி கேமரா திடீரென மாயமாகி இருந்தது. யார் திருடி சென்றனர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் மந்தைவெளி பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.அதன்படி கிளை மேலாளர் கோவிந்தராஜ் சிசிடிவி கேமரா திருட்டு குறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவியின் டிவிஆர் பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர்.