×

‘பணத்தாசை பாசத்தைவிட பெரிதாகி போனது’...ரூ.2 லட்சத்திற்காக 14 வயது சிறுமிக்கு 40 வயது ஆசாமியுடன் திருமண ஏற்பாடு: மாமியார் மீது தாய் புகார்

திருமலை: ரூ.2 லட்சம் பெற்று கொண்டு 14 வயது சிறுமியை 40 வயது தொழிலாளிக்கு திருமணம் செய்து வைக்க மாமியார் முயற்சிப்பதாக சிறுமியின் தாய் போலீசார் புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது 2 பிள்ளைகளுடன் மாமியார் வீட்டில் ராஜலட்சுமி வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறார் ராஜலட்சுமி. இவரது மகனும், மகளும், மாமியாருடன் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியான தனது பேத்திக்கு, வெங்கடாச்சலம் பகுதியை சேர்ந்த 40 வயது தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுக்கவும், அதற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் ரூ.2 லட்சத்தை  ராஜலட்சுமியின் மாமியார் பெற பேரம் பேசியதாக தெரிகிறது. மாப்பிள்ளை வீட்டாரும் இதற்கு சம்மதித்துள்ளனர். இதையடுத்து ராஜலட்சுமிக்கு தெரியாமல் அவரது மகளுக்கு சில நாட்களுக்கு முன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையறிந்த ராஜலட்சுமி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மாமியாரிடம் சென்று தட்டி கேட்டபோது அடித்து விரட்டியுள்ளார்.

இதுகுறித்து கூடூர் போலீசில் நேற்று ராஜலட்சுமி புகார் அளித்தார். அதில், மாப்பிள்ளை வீட்டாரிடம் ரூ.2 லட்சம் பெற்று கொண்டு தனது மகளுக்கு நடத்த திட்டமிட்டுள்ள மைனர் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும், தங்கள் பிள்ளைகளை மீட்டு தரவேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர்.



Tags : Asami , Child marriage, mother complains about mother-in-law,
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...