குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே கடலங்குடி ஊராட்சியில் இருந்து சேத்திரபாலபுரம் செல்லும் வழியில் சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாணாதிராஜபுரம், கடலங்குடி, திருவேள்விகுடி உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், வயதான முதியவர்கள், மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்வோர் உள்ளிட்ட பலரும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை செல்ல பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும்.
இந்த சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே பொது மக்களின் பிரதான சாலையான இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து தருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.