திருவள்ளூர்: திருவள்ளூர், ஆவடியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் யோகா பயிற்சி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் கபால் பதி என்ற யோகாசனம் மூலம் மூச்சை வெளியில் தள்ளி உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் வெளியே தள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் அனுலோபிலம் என்ற பயிற்சியால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்பதால் அதற்கான பயிற்சி உள்ளிட்ட யோகாசனத்தை யோகா ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். இந்த யோகா பயிற்சியில் சேவா சமிதி யோகா ஆசிரியர் தேவேந்திரன், யுவபாரத் ஆசிரியர் க.ரமேஷ், பேட்டர்ன் எம். ஓம்பிரகாஷ், யோக் சமிதி ஆசிரியர் மாரியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி அளித்தனர்.