சென்னை: திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பிக்கு மீண்டும் கொரோனா
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் சென்னை வீட்டில்
தனிமைப்படுத்திக் கொண்டார். திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி
நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில்
அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து
இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கனிமொழி எம்பி ஏற்கனவே 2 தவணை
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த
சட்டமன்ற தேர்தலின்போது , அவர் கவச உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு
செய்தார். இந்நிலையில் கனிமொழிக்கு 2ம் முறையாக கொரோனா தொற்று பாதிப்பு
ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.