×

அசாம் மழை பலி 82 ஆக அதிகரிப்பு

கவுகாத்தி:  வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது. ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகள் அபாயகரமான நிலையில் உள்ளன. மழை வெள்ளத்தினால் இதுவரை 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளத்துக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. கரிம்கஞ்ச் மற்றும் கச்சார் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், கசாரில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக புவனேஷ்வரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று அங்கு விரைந்துள்ளனர்.



Tags : Assam , Assam rains kill
× RELATED அமித்ஷா தொடர்பான போலி வீடியோ: ஒருவர் கைது