சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி தேவாரம் திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும் முதல் 30 நிமிடம் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபட அனுமதிக்க வேண்டும்; இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் வழிபட வேண்டும் என தெரிவித்தார்.