சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தேமுதிக அறிவித்துள்ளது. நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் விரலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் விரல் அகற்றப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தேமுதிக தெரிவித்துள்ளது.