கடலூர்: கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த நபர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். நடராஜர் கோவில் பற்றி ஆலோசனைகளை வழங்கலாம் என அறநிலையத்துறை அறிவித்த நிலையில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட நடராஜர் கோவிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.