×

பாடியில் வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

அம்பத்தூர்: கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் அடுத்த பாடியில் நேற்று நடந்தது. 88வது  வார்டு கவுன்சிலர் நாகவல்லி தலைமை வகித்தார். அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல்  தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார். இதையடுத்து 300க்கும் மேற்பட்ட  பெண்கள் பங்கேற்ற கோலப்போட்டி நடந்தது.

பத்துக்கும் மேற்பட்ட சாலைகளில்  போடப்பட்ட வண்ண கோலங்கள் பார்வையிடப்பட்டு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  வெற்றிபெற்ற பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2வது பரிசாக 7 ஆயிரமும், 3வது பரிசாக 5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதற்கான பரிசுகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சில்வர் குடங்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், டி.எஸ்.பி.ராஜகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Roots Festival Body Singing Festival ,Minister ,BK Sekarbabu , Root ceremony at the body, match, Minister BK Sekarbabu
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...