×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 250 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர் இருப்பு 23.48 அடியாகவும் , நீர்வரத்து 550 கனஅடியாகவும் உள்ளது.     


Tags : Lake Sembarambakkum , Sembarambakkam Lake, Surplus Water, Opening, Public, Warning
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி மாணவன் பலி