டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனையில் திமுக உட்பட 17 கட்சிகள் பங்கேற்கவுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, விசிக திருமாவளவன், காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.