×

ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் கண்டுபிடிப்பு: வருமான வரித்துறை

சென்னை: ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூன் 7,8,9,ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் வசூலான பணம் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை குற்றசாட்டு வைத்துள்ளனர்.



Tags : Income Tax , Rs 100 crore unaccounted income found in Aarti Scans: Income Tax Department
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...