×

ஆவின் பொருட்களில் எந்தவித வேதிப் பொருட்களும் கலப்படம் செய்வதில்லை: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி..!!

நீலகிரி: ஆவின் பொருட்களில் எந்தவித வேதிப் பொருட்களும் கலப்படம் செய்வதில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். உதகையில் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க, விற்பனையை அதிகப்படுத்த புதிய உயர் தொழில்நுட்ப பாலகங்கள் தொடங்கப்பட்டு வருவதாக கூறினார். ஆவின் தயாரிப்பு பொருட்களுடன் எந்தவித தனியார் நிறுவனங்களும் போட்டி போட முடியாது. ஆவின் பொருட்களின் தரமும், சரியான விலையும் உள்ளதால் சந்தையில் தனி பெயர் உள்ளது.

கிழக்கத்திய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஆவின் பொருட்களுக்கு தனி அங்கீகாரம், நல்ல வரவேற்பு உள்ளது என்று குறிப்பிட்டார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதில், சுகாதாரத் துறை, பால்வளத் துறை, வீட்டு வசதித்துறை ஆகிய துறைகளில் ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Spirit ,Minister ,SM Nasser , Spirits, chemicals, impurities, Minister S.M.Nasser
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...