சென்னை: சிறுவாணி அணையில் இருந்து கோவை குடிநீர் ஆதார பணிகளுக்கு நீர்திறந்துவிட்டதற்கு அமைச்சர் கே.என்.நேரு நன்றி தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நீர் திறந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். சிறுவாணி நீரால் கோவை மாநகரின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு போதிய நீர் வழங்க இயலும் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.