×

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது!!

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்குகிறது. பொறியியல் கட்டணத்தில் மாற்றம் இல்லை. எனவே, மாணவர்களிடம் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும். பொறியியல் கலந்தாய்விற்கு மாணவர்கள் (ஜூன் 20ம் தேதி) இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் வருகிற ஜூலை 19ம் தேதி வரை https://tneaonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவரவர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 16ம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும்.

இதில் துணை கலந்தாய்வு அக்.15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு அக்.17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். அக்.18ம் தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும். இந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லை என்றால் அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் இரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 0462-2912081 மற்றும் 044 22351014, 044-22351015ல் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Tamil Nadu , Tamilnadu, Engineering, Courses, Online
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...