சென்னை: தந்தையரின் தியாகத்தைப் போற்றுவோம் என பாமக நிறுவனர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், ‘உலக தந்தையர் நாள் இன்று. அன்பின் உறைவிடம் அன்னை என்றால், தியாகத்தின் திருவுருவம் தந்தை. பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் மெழுகுவர்த்திகள் தந்தையர்கள் தான். தந்தையரை போற்றுவதே பிள்ளையரின் முதல் கடமையாகட்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.