×

டெல்லி சென்ற விமானத்தில் தீ: 180 பயணிகள் உயிர் தப்பினர்

பாட்னா: பாட்னாவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.10 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று டெல்லிக்கு புறப்பட்டது.  புறப்பட்ட சில நிமிடங்கள் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது. மின்விளக்குகள் அணைந்ததால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை உதவியுடன், அவசர அவசரமாக மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து, பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   விமானிசாதுர்யமாக செயல்பட்டதால், விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகள் உயிர் தப்பினர்.

Tags : Delhi , Flight to Delhi, fire, passengers Survivors
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு