×

ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக நீர்வளத்துறையில் பணியாற்றி வந்த 235 உதவி பொறியாளர் இடமாற்றம்

சென்னை: நீர்வளத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 235 உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறையில் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பட்ஜெட் கூட்ட தொடர் நடந்தது. தொடர்ந்து, அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நீர்வளத்துறையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பொது மாறுதல் நடைபெறாத நிலையில், தற்போது உதவி பொறியாளர்கள் 235 பேருக்கு பணிமாறுதல் வழங்கி நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை நில நீர் கோட்ட உதவி பொறியாளர் விஜி பிரியா கிருஷ்ணா நீர் வழங்கும் திட்ட உபகோட்ட எண்:3 உதவி பொறியாளராகவும், அரக்ேகாணம் ஏரிகள் சீரமைப்பு திட்ட பிரிவு உதவி பொறியாளர் பவித்ரன் வாணியம்பாடி மேல் பாலாறு உபகோட்ட உதவி பொறியாளராகவும், கொடைக்கானல் பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜசேகரன் பெரியகுளம் மஞ்சளாறு வடிநில உபகோட்ட உதவி பொறியாளராகவும், மேட்டூர் அணை (கொளத்தூர் பிரிவு) உதவி பொறியாளர் யுவராஜ் மேட்டூர் கால்வாய் பிரிவு உதவி பொறியாளராகவும், தூத்துக்குடி கனிமம் கண்காணிப்பு உபகோட்ட உதவி பொறியாளர் ஆறுமுகராஜ் கோவில்பட்டி கோரம்பள்ளம் ஆறு வடிநில உபகோட்ட உதவி பொறியாளராகவும், கொடுமுடியாறு நீர்த்தேக்க திட்ட உபகோட்ட உதவி பொறியாளர் மினு மேக்டலின் நாகர்கோவில் நிலநீர் உபகோட்ட உதவி பொறியாளராகவும், நாங்குநேரி சிறப்பு திட்ட உபகோட்ட உதவி பொறியாளர் சவுந்தர்யா, கோதையாறு உபகோட்ட உதவி பொறியாளராகவும், காஞ்சிபுரம் தரக்கட்டுப்பாட்டு உபகோட்ட பிரிவு உதவி பொறியாளர் புகழேந்தி காஞ்சிபுரம் ஏரிகள் சீரமைப்பு திட்ட உபகோட்ட உதவி பொறியாளராகவும், சென்னை திட்ட உருவாக்கப்பிரிவு  உதவி பொறியாளர் கார்த்திகேஸ்வரி நீர் ஆய்வு நிறுவன உதவி பொறியாளராகவும், அணைகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் ஸ்மைலினி நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் அலுவலக உதவி பொறியாளராகவும், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் ஸ்டாலின் நீர்வள ஆதார விவர குறிப்பு மைய உதவி பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுப்பாட்டு உபகோட்ட பிரிவு உதவி பொறியாளர் பிரியதர்ஷினி நீரியல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பிரிவு உதவி பொறியாளராகவும், மேல் வைப்பாறு வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் கிரன் பேடி பொதுப்பணி பணிமனை மற்றும் பண்டக சாலை கோட்ட பிரிவு உதவி பொறியாளராகவும், காஞ்சிபுரம் தரக்கட்டுப்பாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் கீர்த்திகா சென்னை வடிவமைப்பு வட்ட அலுவலக உதவி பொறியாளராகவும், சென்னை சுற்றுச்சூழல் குழும கோட்ட உதவி பொறியாளர் ஷீரின் பானு சென்னை நிலநீர் உபகோட்ட உதவி பொறியாளராகவும், மைசூர் காவிரி நீரளவை பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் அஸ்வினி தரமணி நீர்வள ஆதார விவர குறிப்பு மைய உதவி பொறியாளராகவும், கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட கோட்டம் எண்-1 உதவி பொறியாளர் காயத்ரி, சென்னை நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் என 235 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Water Resources Department , Transfer of 235 Assistant Engineers who have been working in the Water Resources Department for more than 3 years in one place
× RELATED பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407...