×

நடத்தை விதி மீறிய 2 ரவுடிகளுக்கு 10 மாத சிறை

சென்னை: அமைந்தகரை பி.பி.கார்டன் மற்றும்  ஷெனாய் நகரை சேர்ந்த ரவுடிகளான ஆழாக்கு (எ) விக்னேஷ் (30), ஊறுகாய் பாட்டில் (எ) விக்னேஷ் (29) ஆகியோர் மீது அமைந்தகரை,  அரும்பாக்கம், திருவேற்காடு உட்பட பல்வேறு காவல்  நிலையங்களில் அடிதடி, வழிபறி என 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்  உள்ளன. இவர்கள், இனி நாங்கள் எவ்வித குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம், என அண்ணாநகர் துணை ஆணையரிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தனர். ஆனால், அதை மீறி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை விதிமீறிய இருவரையும் 10 மாதம் பினையில் வெளியில் வரமுடியாதபடி சிறையில் அடைக்க அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் உத்தரவிட்டார்.



Tags : 10 months imprisonment for 2 rowdies for violating the code of conduct
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...