விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் கஞ்சா வழக்கில் கைதானவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. இதுவரை 26 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தகவல் தெரிவித்துள்ளார்.