×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் 500 தோழர்களுக்கு இன்று பொற்கிழி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் டாக்டர் முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் கலைஞரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு 500 திமுக தோழர்களுக்கு ரூ 50 லட்சம் செலவில் தலா ரூ 10 பொற்கிழி திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஏற்பாட்டில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (17ம் தேதி) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  தலைமை ஏற்று திமுக தோழர்களுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், அரக்கோணம் தொகுதி எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எனவே இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Tiruvallur West District ,Chief Minister ,Mukhikshi K. Stalin , Today, Chief Minister MK Stalin presents a plaque to 500 comrades on behalf of the DMK in the Tiruvallur West district
× RELATED அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு