×

ஸ்ரீநகரில் 28, 29ம் தேதி ஜிஎஸ்டி கூட்டம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலில் 47வது கூட்டம், ஸ்ரீநகரில் வரும் 28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் 47வது கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28, 29 தேதிகளில் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது. இதில், மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள் (கேசினோக்கள்), குதிரை பந்தயம் (ரேஸ் கோர்ஸ்கள்), ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

Tags : GST ,Srinagar , GST meeting on 28th and 29th in Srinagar
× RELATED கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து...