×

சத்தியமங்கலம் அருகே மானை வேட்டையாடிய செந்நாய் கூட்டம்: வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மானை வேட்டையாடி கடித்து குதறும் செந்நாய் கூட்டம் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக பவானிசாகர், தலமலை, ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் செந்நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. செந்நாய்கள் எப்போதும் கூட்டமாக நடமாடும்.

இந்நிலையில், சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆசனூர் வனப்பகுதியில் ஒரு புள்ளி மானை 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள் வேட்டையாடின. பின்னர், அதன் இறைச்சியை கூட்டமாக கடித்து குதறி தின்றன. இந்த காட்சியை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஓம் பிரகாஷ் படம் பிடித்துள்ளார். செந்நாய்கள் வசிக்கும் வனப்பகுதி வளமான வனப்பகுதியாகும். கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் செந்நாய்கள் மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய பின்னர் அதன் உடலை ஓரிரு நாட்கள் கழித்து ஒன்று சேர்ந்து கூட்டாக உண்பது வழக்கம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Satyamangalam , Chennai herd of deer hunting near Satyamangalam: Video viral
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...