சென்னை: விடுதலை கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம், உயர்நீதிமன்றமே கூட பரிசீலிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.