×

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி , திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மேலை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குமாரி கடல், மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, கர்நாடக, கேரளா, உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Atmospheric bottom circulation, chance of heavy rain, Meteorological Center information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...