*தூக்கிவீசப்படும் பதற வைக்கும் வீடியோ வைரல்
தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (60). இவர், நேற்று காலை செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த கார், எதிர்பாராதவிமாக வேலுச்சாமி மீது வேகமாக மோதியது. இதில், வேலுச்சாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வேலுச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த உடுமலை போடிபட்டையை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி முதியவர் தூக்கிவீசப்படும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பதற வைக்கும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.