சென்னை: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதல்வர் திறந்துவைத்துள்ளார். அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் காவல் நிலையம் என்றவகையில் 20 காவல் நிலையங்கள் உருவாக்கபட்டுள்ளது. வளசரவாக்கம், தாம்பரம், சேலையூர், சேரன்மாதேவி, கரூர், புளியங்குடி உள்ளிட்ட 20 காவல் நிலையங்களை திறந்துவைத்தார்.