×

ரஷ்யாவின் தாக்குதலால் சீர்குலைந்த உக்ரைனின் புனரமைப்பு பணிக்காக பிரிட்டனில் நிதி திரட்டும் அந்நாட்டு நடனக் கலைஞர்கள்!!

லண்டன் : உக்ரைனைச் சேர்ந்த பாலே நடன குழு ஒன்று பிரிட்டனில் நிகழ்ச்சியை நடத்தி உக்ரைன் புனரமைப்புக்காக நிதி திரட்டி வருகிறது. உக்ரைனைச் சேர்ந்த கீவ் சிட்டி பாலே கம்பெனி என்ற குழு உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தும் பயணத்தில் ஈடுபட்டு இருந்தது.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய போது, நாடு திரும்ப முடியாமல் அவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிக்கிக் கொண்டனர். 100 நாட்களையும் கடந்து போர் நீடித்து வரும் நிலையில், தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை புனரமைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக அவர்கள் பல்வேறு நாடுகளில் பாலே நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது பிரிட்டன் வந்துள்ள உக்ரைன் நடனக் குழு, யார்க் நகரத்தில் உள்ள ராயல் கலையரங்கில் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினர். உக்ரைனில் இயல்பு வாழ்க்கை துயரம் நிறைந்ததாக மாறி உள்ள போதும் உக்ரைன் உயிர்ப்புடன் உள்ளதை நடனம் மூலம் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக அந்நாட்டின் கலைஞர்கள் கூறுகின்றனர். உக்ரைன் கலைஞர்களின் பாலே நடன நிகழ்ச்சிக்கு பிரிட்டன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


Tags : Ukraine ,Russia , Russia, attack, Ukraine
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...