திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், கொசவன் பாளையம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தலா ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானிய தொகையில் வீடு கட்டும் பணி ஆணையை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார். பூந்தமல்லி ஒன்றியம், கொசவன்பாளையம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானிய தொகையில் வீடுகட்டும் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவருமான டி.தேசிங்கு தலைமை தாங்கினார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் மானியதொகையில் வீட்டு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார்.