×

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நாமக்கல் காந்தியவாதி மனு தாக்கல்

சேந்தமங்கலம்: ஜனாதிபதி தேர்தல், அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் செல்லம்பட்டி ஊராட்சி மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ். இவர் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி  தலைவராகவும்,  யோகா மாஸ்டராகவும் உள்ளார். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


Tags : Namakkal Gandhian , Namakkal Gandhian files petition to contest presidential election
× RELATED ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய...