×

ஓராண்டு திமுக ஆட்சியில் குறைகள் இல்லை: சமக தலைவர் சரத்குமார் பேட்டி

சேலம்: சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல. பாஜ நிர்வாகிகள் சிலர், நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில் மத வாரியாக பேசியது உலகளவில் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு பாஜ தலைமை, அவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை உலகளவிலான செய்தியாக எடுத்து செல்ல வேண்டாம்.

ஒரு சிலர் செய்யும் தவறால் போலீஸ் துறைக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. காவல் துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு எப்படி நடந்து ெகாள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும். தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை.

மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து, பிரச்னைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த ேபாலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தவறு செய்பவர்கள் திருந்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும். இவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Djhagam ,Samakshagam ,Sarathkumar , One year DMK rule, Co-Chairman Sarathkumar,
× RELATED பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்.....