×

உலக வரலாற்றில் 80 ஆண்டு காலம் மக்களுக்காக உழைத்த ஒரே தலைவர் கலைஞர்: க.சுந்தர் எம்எல்ஏ பேச்சு

சென்னை: உலக வரலாற்றில் 80 ஆண்டு காலம்  மக்களுக்காக உழைத்த ஒரே தலைவர் கலைஞர் என க.சுந்தர் எம்எல்ஏ கூறியுள்ளார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்  சூனாம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சிற்றரசு தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரேமா சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரவிகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணன்,  கார்த்திகேயன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜீவா பூலோகம்,  பாரதி காண்டீபன், இனியமதி கண்ணன், பி.கண்ணப்பன், சூனாம்பேடு ஊராட்சி தலைவர் ஜே.எஸ்.கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கிளை செயலாளர் ஆ.முரளி வரவேற்றார்.

கூட்டத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்  எம்எல்ஏ, தலைமை கழக பேச்சாளர் ஆலந்தூர் ஒப்பிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ”உலக வரலாற்றிலேயே 80 ஆண்டு காலம் பொதுமக்களுக்காக உழைத்த ஒரே தலைவர் கலைஞர். மக்கள் நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கலைஞர்” என்றார்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் வடவள்ளி ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல் மாலிக், இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் ச.இனியரசு, கிளை செயலாளர் ரவிக்குமார், கட்சி நிர்வாகிகள் எல்.எஸ்.ரவீந்திரநாத், ஆ.கோ.பாண்டுரங்கன், ஏ.என்.பாரத், ஜி.நிர்மல்குமார்,  ஜி.பால்ராஜ், சி.கே.ராஜேந்திரன், ஜி.தருமன், மு.கண்ணகி, எம்.வசந்தராஜ், வேதாச்சலம், ஆறுமுகம், டீ.சிவனேசன், ஆர்.பாலசுந்தரம், முன்னாள் ஒன்றிய செயலாளர் அ.விஜயன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.


Tags : K. Sundar , World History, Leader who worked for the people, Artist, K. Sundar MLA
× RELATED திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம்...