சென்னை: போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுடன் அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். கூடுதல் பேருந்துகள் இயக்கம், போக்குவரத்து தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. போக்குவரத்து கழகங்களில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாளை ஆலோசனை நடைபெறவிருக்கிறது.