×

பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு: விற்பனை ஜோர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தைக்கு நேற்று, வெளியூர் மாடுகள் வரத்து அதிகரித்து, விற்பனை விறுவிறுப்பால் கூடுதல் விலைக்கு போனது. பொள்ளாச்சியில் வாரந்தோறும்  மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இதற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வங்கி செல்கின்றனர். இந்த மாதம் துவக்கத்திலிருந்து வெளியூர் மாடுகள் வரத்து குறைவாலும், மேலும், கேரள வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனை மந்தமானது. இதனால், பெரும்பாலான மாடுகள் குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது.

சிலநாட்களில் மாடுகள் விற்பனையாகாமல் சந்தையிலேயே கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நடந்த சந்தைநாளின்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநில பகுதியிலிருந்து விற்பனைக்காக மாடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டன. அதிலும், ஆந்திர மாநில பகுதியிலிருந்து எருமை மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்துள்ளது. மேலும், கேரள வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்ததால், சில வாரத்துக்கு பிறகு நேற்று மீண்டும் மாடு விற்பனை விறுவிறுப்பானது. நேற்று ஒரே நாளில் ரூ.2.10 கோடி வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi , Increased supply of cattle to Pollachi market: Sales boom
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!